தினமணி 07.03.2013
பல்லடம் அண்ணா நகரில் கழிப்பிடம் கட்ட பூமிபூஜை
பல்லடம் நகராட்சி 15-ஆவது வார்டு அண்ணா நகரில், தமிழக அரசின் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 10 கழிப்பிடங்கள், 6 குளியல் அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கழிப்பிடங்கள் கொண்ட நவீன பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் தலைவர் பி.ஏ.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
வார்டு கவுன்சிலர் கந்தசாமி வரவேற்றார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் பூமிபூஜையை துவக்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் பி.சாந்தகுமார், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் த.கிருஷ்ணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் சூ.தர்மராஜன், எஸ்.ராஜேந்திரன், சித்ரா, மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் ஆர்.ஜோதிமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.