Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகாராஜநகரில் ரூ. 7.30 லட்சத்தில் மின் கோபுர விளக்கு

Print PDF

தினமணி 14.09.2009

மகாராஜநகரில் ரூ. 7.30 லட்சத்தில் மின் கோபுர விளக்கு

திருநெல்வேலி, செப். 13: பாளையங்கோட்டை மகாராஜநகர் ரவுண்டானாவில் ரூ. 7.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின் கோபுர விளக்கு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் சுப. சீதாராமன், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், வேளாண் விற்பனை வாரியத் தலைவர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.