Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கல்

Print PDF
தினமணி        21.05.2013

துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கல்


ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவுப் பணிக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு பயன்படும் வகையில் மூன்று சக்கர மிதிவண்டிகள் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5,20 லட்சத்தில் வாங்கப்பட்டன. அதே போல திடக்கழிவு மேலாண்மை பணி நிதி ஒதுக்கீட்டில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் நான்கு சக்கர மினி டிப்பர் ஆட்டோ ஒன்றும் வாங்கப்பட்டது. அவற்றை துப்புரவுப் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் பி.பழனியம்மாள் கலந்து கொண்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ஜெ.ஜமால்தீன், அதிமுக தொகுதி கழகச் செயலாளர் பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையர் எம்.ஜோதிக்குமார், நகர்மன்ற உறுப்பினர் கே.பி.வி. மனோகரன், தலைமை எழுத்தர் முத்துகுமரன், ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.