தினமணி 22.09.2009
சிவகாசியில் உயர் மின் கோபுர விளக்கு அமைப்பு .
சிவகாசி, செப். 21: சிவகாசி நகராட்சி சார்பில் விருதுநகர் சாலை காரனேசன் பஸ் நிறுத்தம் அருகே உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.5லட்சம் மதிப்பீட்டில் 16மீட்டர் உயரத்தில் இந்த மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை தொழிலதிபர் டி. நடராஜ்பிரபு இயக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தணைத் தலைவர் ஜி. அசோகன், நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.