தினமணி 25.09.2009
ஆர்க்காடு அண்ணா சிலை அருகே உயர்மின் கோபுர விளக்கு திறப்பு
வாலாஜாபேட்டை, செப்.24: ஆர்க்காடு அண்ணா சிலை அருகே ரூ.4.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை எம்எல்ஏ கே.எல்.இளவழகன் திறந்து வைத்தார்.
நகராட்சி ஆணையர் தே.சாது சுந்தர்சிங், நகர்மன்றத் துணை தலைவர் பொன்.ராஜசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் எ. நந்தகுமார், டி.ஜீவமணி, பி.வி. தயாளன், யோ. செல்வராசு. சுரேஷ், செல்வம், மற்றும் பொறியளர் சா.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.