Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிட்லபாக்கத்தில் ரூ 2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு

Print PDF

தினகரன்               12.08.2013

சிட்லபாக்கத்தில் ரூ 2.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு

தாம்ரபம், : சிட்லபாக்கத்தில் ரூ 12.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைச்சர் சின்னையா திறந்து வைத்தார்.

சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகரில் பேரூராட்சி பொதுநிதி ரூ 12.5 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் இரா.மோகன் வரவேற்றார். அமைச்சர் சின்னையா தலைமை தாங்கி புதிய சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்பி, பரங்கிமலை ஒன்றிய குழுதலைவர் என்.சி.கிருஷ்ணன், ராமகிருஷ்ணா நகர் பொது நல சங்க நிர்வாகிகள் நந்தகோபால், கிருஷ்ணகுமார், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூங்காவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக் கவும், சேலையூர் பகுதியில் இருந்து சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர்  இணைப்பு சாலையை விரைவில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து பணிகளும் செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.