Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினகரன்              16.08.2013

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை


வில்லியனூர்: புதுவை உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படா மல் இருந்து வந்தது. இதனால் கழிவுநீர் ஆங் காங்கே தேங்கி கொசுத் தொல் லைகள் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இது சம்பந்தமாக அங்குள்ள மக்கள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர்.

 அதனடிப்படையில் திருநகர் முதன்மை சாலையில் இருபக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்ட ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக நடந்த பூமி பூஜையை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் கருணாநிதி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.