தமிழ் முரசு 31.08.2013
ரேஷன் கடைக்கு கட்டிடம் செங்குன்றம் பேரூராட்சி தீர்மானம்
புழல்:செங்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. நிர்வாக செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.செங்குன்றத்தில் உள்ள சைதை கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் 6 ரேஷன் கடைகள் செயல்படுவதால் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ரேஷன் கடையை அந்தந்த பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்து எம்எல்ஏ நிதி உதவி பெற்று கட்டிடம் கட்டவேண்டும். 15வது வார்டுக்கு உட்பட தேவகி நகர், ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் உள்ள மழை நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் அனைத்து பகுதியிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.