Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 30 லட்சத்தில் ஆதரவற்றோருக்கான காப்பகம்: மேயர்

Print PDF

தினமணி           04.10.2013

ரூ. 30 லட்சத்தில் ஆதரவற்றோருக்கான காப்பகம்: மேயர்

திருநெல்வேலியில் தெருக்கள், சாலையோரங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் தங்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் மாநகராட்சி சார்பில் காப்பகம் கட்டப்படும் என மேயர் விஜிலாசத்யானந்த்  தெரிவித்தார்.

மாநகராட்சிப் பகுதியில் சாலையோரம், தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், முதியோர் தங்கும் வகையில் காப்பகம் கட்ட வேண்டும் என்றும், மாநகராட்சியில் பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை அப்புறப்படுத்தி அங்கு காப்பகம் கட்டவும், அதனை சரணாலயம் தொண்டு நிறுவனம் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 18-வது வார்டில் குறுக்குத்துறையில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் திட்டக் கட்டடம் உள்ள இடத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் காப்பகம் கட்டுவதென மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் மாநகராட்சி மூலம் இக்காப்பகம் கட்டப்படுகிறது. இங்கு அவர்களுக்கு மருத்துவ வசதி, தொழில்பயிற்சி போன்ற உதவிகள் தொண்டு நிறுவனம் மூலம் செய்யப்படும் என மேயர் விஜிலாசத்யானந்த் தெரிவித்தார். 

காப்பகம் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியதை அடுத்து சரணாலயம் நிறுவனர் அந்தோணிகுருஸ் அடிகளார், இயக்குநர் மோசஸ்ராஜன், மேலாளர் மைக்கேல் உள்ளிட்டோர் மேயரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.