தினமலர் 09.10.2013
குப்பைகள் சேகரிக்க ரூ. 33 லட்சத்தில் வாகனம்
புதுச்சேரி:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரித்து, பாதுகாப்பாக அகற்ற, 33 லட்சம் ரூபாய் செலவில் காம்பாக்டர் வாகனம் மற்றும் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டது.
குப்பை அள்ளும் வாகன செயல்பாட்டை, அஜிஸ் நகரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.
மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட இந்த காம்பாக்டர் வாகனம், கோரிமேட்டிலிருந்து திண்டிவனம் சாலை வழியே ராஜிவ் காந்தி சதுக்கம் வரையும், மேட்டுப்பாளையம் பிப்டிக் பகுதியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக ராஜிவ் காந்தி சதுக்கம், காமராஜ் சாலை, சாரம் வரையிலும் ராஜிவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை. இந்திராகாந்தி சதுக்கம் முதல் வில்லியனூர் மெயின்ரோடு வழியாக அரும்பார்த்தபுரம் வரை சென்று குப்பைகளை சேகரிக்கும்.
துவக்க விழா நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அழகிரி, செயற்பொறியாளர் குணசேகரன் கலந்து கொண்டனர்.