தினகரன் 23.10.2013
திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ2.73 கோடியில் தெரு விளக்குகள்
திருவொற்றியூர்,: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 3வது வார்டு மற்றும் 11 முதல் 14 வரையிலான வார்டுகளில் ழீ2 கோடியே 73 லட்சத்து 10 ஆயிரம் செலவில் சோடியம் மற்றும் எல்ஈடி தெரு மின்விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டது.
இதன் திறப்பு விழா திருவொற்றியூர் தியாகராய புரத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார். எம்எல்ஏ குப்பன் வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மின்விளக்குகளை இயக்கி துவக்கி வைத்தனர்.