தினகரன் 30.10.2013
விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணி விரைவில் துவக்கம்
மதுரை,: மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிந்துள்ளது. பல் வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை. இதனால் சுகா தார சீர்கேட்டுடன் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை தெற்குத்தொகுதி எம்எல்ஏ அண்ணாதுரை கூறுகை யில், மதுரையில் 72வது வார்டு நவரத்தினபுரம் 3வது தெரு, 54வது வார்டு மாணிக்க நகர், மாரியம்மன் நகர், ஞானவேல்நகர், அம்மன்தெரு, மருதுபாண்டியர் நகர், ஸ்ரீராம்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி கள் பாதாள சாக்கடை வசதியின்றி உள் ளது.
நகருக்குள் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் முனிய சாமி, மதுரையில் பாதாளச்சாக்கடை வசதி களை விரிவுபடுத்தும் வகை யில் நிதி ஒதுக்கி பணிகள் துவக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங் கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.