Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.24 லட்சத்தில் பணிகள் துவக்கம்

Print PDF

தினகரன்           30.10.2013

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.24 லட்சத்தில் பணிகள் துவக்கம்

திசையன்விளை, : திசையன்விளை பேரூராட்சி 8வது வார்டில் ரூ.5 லட்சம் மதிப்பில் பைப்லைன் விஸ்தரிப்பு, ரூ.19.10 மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வக்கீல் சீனிவாசன் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார்.

இதில் துணைத்தலைவர் சுதாகர் பாலாஜி, கவுன்சிலர்கள் சுப்பையா, சித்திரைவேல், புஷ்பராணி, ஜெயக்குமார், பிரதீஸ்குமார், சாகுல்ஹமீது, ராஜசெல்வி ராஜசேகர், குமாரபலவேசம், சரஸ்வதி, மாரிமுத்து, செந்தில்குமார், நாராயண செல்வி, சோமசுந்தரி, இசக்கி, பொன்மணி நடராஜன், ஜான்சிராணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் பாலன், இயக்குநர் செல்வன், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், துணை தலைவர் பாலமுருகன், அரிமா திருவடிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.