Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

Print PDF

தினபூமி        13.11.2013

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வாகனங்கள்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini-Gave-Car-keys(C).jpg 

சென்னை, நவ.13 - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டிற்காக  நவீன வசதிகளுடன் கூடிய 60 புதிய நாய் பயண வாகனங்கள்  வழங்கும்  நிகழ்ச்சி.

தமிழக முதலமைச்சர் 6.10.2012 அன்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தல்  மற்றும் வெறி நாய் கடி தடுப்பு திட்டம்  செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வின் அடிப்படையில்,  இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் முனைப்புடன் சிறப்பாக செயல்படுத்திட பல்வேறு  அறிவுரைகளை வழங்கினார்.  

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க,  9 மாநகராட்சிகள் (சென்னை தவிர) மற்றும் 126 நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும்  தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பராமரிப்பதற்காக  80 எண்ணிக்கையிலான நாய்கள் காப்பகங்கள் கட்டவும்,   நாய்கள் பயண வாகனங்கள் 60 வாங்கிடவும் அரசு ரூ.5.40 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நேற்று (12.11.2013) 60 எண்ணிக்கையிலான புதிய நாய்கள் பயண வாகனங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு  நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வழங்கப்பட்டன.   இந்த வாகனத்தின் சராச்சரி மதிப்பு ரூ.6.50 இலட்சம் ஆகும்.

இந்த நவீன நாய் வாகனங்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டவையாகும்.  மனித நேயத்துடன் நாய்களை பிடித்து, அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்ல வசதியாக நவீன முறையில் நாய்கள் பயண வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில்,  ஒவ்வொரு நாயும் தனித்தனியாக அமருவதற்கு வசதியாக போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கொண்ட 6 தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், நாய்களை  பிடிக்கும் பணியாளர்களுக்காக தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த வாகனங்களை பயன்படுத்துவதால் மனித நேயத்துடனும், விரைவாகவும், கூடுதலாகவும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து பராமரிக்க இயலும்.

இவ்வாறு அவர் செய்திக்குறிப்பு கூறுகிறது.