Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திசையன்விளையில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

Print PDF

தினகரன்         30.11.2013

திசையன்விளையில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

தியைன்விளை, : திசையன்விளை பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வக்கீல் சீனிவாசன் பணியை துவக்கி வைத்து பேசினார்.

இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சுதாகர் பாலாஜி, கவுன்சிலர்கள் சித்திரைவேல், இசக்கி, பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், துணைத் தலைவர் பாலமுருகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.