தினமணி 07.12.2013
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடியில் கட்டடம்
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிதம்பரம் நகராட்சி தற்போதைய அலுவலகத்துக்குப் பின்புறம் அடிப்படை வசதி மேம்பாட்டு நிதி ரூ 1.25 கோடி, நகராட்சி நிதி ரூ 1.25 கோடி, ஆக மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் நகராட்சி நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், நகராட்சி எழுத்தர் காதர்கான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.