Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

Print PDF

தினத்தந்தி            16.12.2013

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் செலவில் நலத்திட்ட பணிகள்

கோபிசெட்டிபாளையம் அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளியங்காடு பகுதியில் தார்சாலை, பங்களாப்புதூரில் கான்கிரீட் சாலை, வாணிப்புத்தூரில் குடிநீர் வசதி, டி.என்.பாளையத்தில் சாக்கடை வசதி ஆகியவற்றிற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். விழாவில் அந்தியூர் எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ரங்கநாதன், கவுன்சிலர்கள் ஹரிபாஸ்கர், அண்ணாத்துரை, வெள்ளியங்கிரிநாதன், முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.