Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் திறப்பு

Print PDF

தினமணி            16.12.2013

சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள புதிய சின்டெக்ஸ் குடிநீர் குழாய்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

 மானாமதுரையில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகரில் 4 ஆவது வார்டில் பழைய போஸ்டாபீஸ் தெரு, 2 ஆவது வார்டில் சி.எஸ்.ஐ பள்ளி காம்பவுண்ட், சிவகங்கை ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் போன்ற இடங்களில் பேரூராட்சியின் பொதுநிதியிலிருந்து ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் குழாய் அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பேரூராட்சித் தலைவர் ஜோசப்ராஜன் திறந்து வைத்தார்.

 இந் நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனியசாமி, பரமேஸ்வரி ஆறுமுகம், சோமன், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மானாமதுரை நகரில் மேலும் பல இடங்களில் போர்வெல் குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி குழாய் இணைப்புகள் மூலம் சப்ளை செய்யப்படும் என பேரூராட்சித் தலைவர் தெரிவித்தார்.