தினகரன் 17.12.2013
அவிநாசியில் நவீன சுகாதார வளாக கட்டடம்
அனுப்பர்பாளையம்,: அவிநாசி பேரூராட்சி 11வது வார்டு கஸ்தூரிபாய் வீதி பகுதியில் ரூ. 12லட்சம் மதிப்பீட்டில், தமிழக அரசின் நிதியிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நவீன சுகாதார வளாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாடிற்காக இந்த புதிய கட்டிடத்தை அவிநாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள்ராஜசேகர் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், துணைத்தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, முன்னாள் துணைத்தலைவர் ராஜசேகர், கவுன்சிலர்கள் சாந்தி ராஜேந்திரன், ராஜா மணி,வையாபுரி மற்றும் முத்துசரவனன், மல்லீசுவரன், வேலுசாமி, சிவக்குமார், நாகராஜ், கணேசமூர்த்தி, மனோகர், தண்டபானி, செந்தில், குமார், லட்சுமிமுருகேஷ் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.