தினமணி 31.12.2013
பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்
பெரியநாயக்கன்பாளைத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.1.03 கோடி செலவில் கட்டப்பட்ட 36 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெ.நா.பாளையம் பேரூராட்சியில் 9-வது வார்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டடத்தில் எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம், ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை கொடநாடு முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழாவில் பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே.கதிர்வேல், கோவனூர் துரைசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.