Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

Print PDF

தினமணி              31.12.2013

அவிநாசி பேரூராட்சி கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

அவிநாசி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

அவிநாசி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் அவிநாசி சேவூர் சாலையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. இப் புதிய அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து அலுவலகப் பணிகளை அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்புசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் பி.மணிச்சாமி, துணைத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி,  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கலைவாணன், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினி ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், துணைத் தலைவர் ஆனந்தகுமார், அதிமுக ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசிதொகுதி கழகச் செயலாளர் சேவூர்.ஜி.வேலுசாமி, வார்டு கவுன்சிலர்கள உள்ளிட்டோர் பங்கேற்றனர்.