தினமணி 31.12.2013
வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறப்பு
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தேர்வுநிலைப் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
ரூ. 40 லட்சம் மதிப்பில் 2,400 சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடனான புதிய கட்டடத்தை நண்பகல் 12.50 மணிக்கு முதல்வர் திறந்துவைத்தார். அப்போது, புதிய கட்டடத்தில் தஞ்சை மண்டல பேரூராட்சி
உதவி இயக்குநர் மணி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், பேரூராட்சித் தலைவர் மாஸ்டர் எஸ். ஜெயபால், துணைத் தலைவர் சத்யா, ஒன்றியக் குழுத் தலைவர் பரமேஸ்வரி, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மாத்தூர் குருமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமன், இளநிலைப்பொறியாளர் திருச்செல்வம் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.