தினகரன் 31.12.2013
பள்ளபாளையம் பேரூராட்சி புதிய கட்டடம் திறப்பு
சூலூர், : கோவை சூலூர் பள்ளபாளையம் பேரூராட்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம் கட்ட ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, பணிகள் நிறைவுபெற்று விட்டது. இதை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வீடியோ கான்பரஸ் மூலம் திறந்துவைத்தார்.
இதையடுத்து, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் சண்முகம், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், துணைத்தலைவர் பிரகாஷ் செயல்அலுவலர் சுந்தர்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் ராஜசேகரன், ஆனந்தகுமார், குமாரசாமி, பால்ராஜ், பிரேமாகுமார், செல்வி, முருகன், குஞ்சம்மாள், ஜெயந்தி, ஈஸ்வரி, வசந்தகுமார், ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், பணி ஆய்வாளர் சந்திரபோஸ்காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.