Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதல்வர் காணொலி காட்சியில் திறந்தார்

Print PDF

தினகரன்                03.01.2014

ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதல்வர் காணொலி காட்சியில் திறந்தார்

மண்ணச்சநல்லூர: ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டது. மேலும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டது. புதிய அலுவலகம் மற்றும் சுகாதார வளாகத்தை  முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதிய கட்டத்தில் அலுவலகத்தின் செயல்பாடுகள் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி, முன்னாள் தலைவர் சின்னையன், செயல் அலுவலர் கணேசன், துணைத்தலைவர் சாந்தா, அலுவலக இளநிலை உதவியாளர்கள் சாகுல் ஹமீது, சதீஷ்கிருஷ்ணன், அதிமுக நகர செயலாளர் சம்பத்குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரவீன்குமார் பிச்சை, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.