Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினகரன்              13.01.2014

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

இடைப்பாடி, :  இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

இடைப்பாடி வாரச்சந்தை பகுதியில் கொங்கணாபுரத்திற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நட்டு விழா மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ2 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி இயக்குனர் வரவேற்றார். அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் செம்மலை எம்பி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஷ், நகர்மன்ற தலைவர் கதிரேசன், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், பேரூராட்சி துணை தலைவர் கந்தசாமி, வசந்தா, ஒன்றியக்குழு துணைதலைவர் சாந்தி செந்தில், நல்லாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.