Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

Print PDF

தினகரன்            10.01.2014

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

அனுப்பர்பாளையம், :திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.45.75 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளைத் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி திட்டத்ததின் கீழ், வார்டு எண் 20,25,26,28, ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், நியாயவிலைக்கடை கட்டுதல், புதிய அங்கண்வாடி மையக்கட்டிடம் கட்டுதல் ஆகியப் பணிகள் ரூ.45.75 லட்சம் செலவில் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், மண்டலத்தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், இரண்டாவது மண்டல உதவி ஆணையர் வாசுகுமார், பொறியாளர் கௌரிசங்கர், சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் போயம்பாளையம் விஜயகுமார், உமாமகேசுவரி, முத்து, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.