தினமணி 21.01.2014
ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் சாலை, மழை நீர் வடிகால் பணிக்கு பூஜை
ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் தார்ச் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு மேயர் ப.மல்லிகா பரமசிவம் தலைமை வகித்தார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
46-வது வார்டுக்குள்பட்ட சரவணபவ நகரில் ரூ.40 லட்சத்திலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லதம்பி நகரில் ரூ.39 லட்சத்திலும், திருவள்ளுவர் நகர், நிட் இந்தியா பகுதியில் ரூ.40 லட்சத்திலும், 47-வது வார்டுக்குள்பட்ட வசந்தம் நகரில் ரூ.39 லட்சத்திலும், பாரதி நகர் 2-வது வீதி, முதல் வீதி குறுக்கு சாலைகளில் ரூ.36 லட்சத்திலும், பாரதி நகர் 3-வது வீதி மற்றும் 7-வது வீதி குறுக்கு சாலைகளில் ரூ.34 லட்சத்திலும் மழை நீர் வடிகால் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க மொத்தம் ரூ.2.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், காஞ்சனா பழனிசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.