தினகரன் 23.01.2014
நவீன வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி
மதுரை, : மதுரை மாநகராட்சி சார்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகிலுள்ள தெருவில் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கப் பட்டுள்ளது.
இங்கிருந்து மழை நீர் சேரும் வகையில் நவீன வடிவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நகர பொறியாளர் மதுரம் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.