Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூர் பேரூராட்சியில் புதிய கட்டமைப்பு பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 3.11.2009

கூடலூர் பேரூராட்சியில் புதிய கட்டமைப்பு பணிகள் துவக்கம்

பெ.நா.பாளையம், அக். 2: பெரியநாயக்கன்பாளையத்தையடுத்து கூடலூர் பேரூராட்சியில் 216.72 கோடிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பேரூராட்சியில் உள்ள ரிசர்வ் சைட்டுகளை பாதுகாப்பதற்கென சுற்றி மின்வேலி அமைப்பது, நேருநகர், திருமலைநாயக்கன்பாளையம், சி.எஸ்.நகர், சாமையன் நகர், ரங்கநாயகி நகர், ராவத்தக் கொல்லனூர் உள்ளிட்ட பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் 65 இடங்களில் வடிகால் வசதி, தார்ச்சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட உள்ளன.

இதனை அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செயல் அலுவலர் கே.கல்யாணசுந்திரம் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுவாமிநாதன், நாகராஜ், செல்வராஜ், குருந்தாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:12