தினமணி 14.11.2009
ஆலந்தூர் சாலை பாலம் டிசம்பரில் திறப்பு
சென்னை, நவ.13: ஆலந்தூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலம், டர்ன்புல்ஸ் சாலை -செனடாப் சாலை மேம்பாலம், ஜோன்ஸ் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை ஆகியவை டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியையும், ஜோன்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் வாகன சுரங்கப்பாதை பணியையும் மேயர் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (நவ. 13) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மாநகராட்சி சார்பில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில், தரைமட்ட பாலத்துக்குப் பதிலாக உயர்மட்ட பாலம் ரூ. 9.3 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஜோன்ஸ் சாலையில் ரூ. 8.89 கோடி செலவில் ரயில்வே சந்திப்புக்கு குறுக்கே வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் டர்ன்புல்ஸ் சாலை -செனடாப் சாலை மேம்பாலம் ரூ. 19.93 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மூன்று பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவற்றை திறந்து வைக்க உள்ளார் என்றார