Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி 14.11.2009

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

ராமநாதபுரம், நவ.13: ரூ. 50 லட்சம் மதிப்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகப் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த..ஹரிஹரன் தலைமை வகித்தார். கே.ஹசன்அலி எம்.எல்., துணைத் தலைவர் ராஜாஉசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜி. லலிதகலா ரெத்தினம் வரவேற்றார்.

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் திறந்து வைத்துப் பேசினார்.

விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் து.இளங்கோ, நகராட்சி ஆணையர் கே.வி. பாலகிருஷ்ணன், திமுக நகர் செயலர் ஆர்.ஜி. ரெத்தினம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் துல்கீப், நகர் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:32