Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புது பொலிவு பெறும் நெல்லை மாநகராட்சி ரூ.5 கோடியில் நவீன 3 மாடி கட்டட வசதி

Print PDF

தினமலர் 24.12.2009

புது பொலிவு பெறும் நெல்லை மாநகராட்சி ரூ.5 கோடியில் நவீன 3 மாடி கட்டட வசதி

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் 5 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 3 மாடி கட்டடங்கள் கட்டப்படுகிறது.நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கட்டடம் 1914ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. 95 ஆண்டுகள் பழைமையான இக்கட்டடத்தில் விரிசல்கள், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வயரிங் அமைப்புகளும் மோசமாக உள்ளதால் மின் கசிவும் அடிக்கடி ஏற்படுகிறது.இதுதொடர்பாக தொடர்ந்து ஊழியர்கள் புகார் தெரிவித்ததின் பேரில் இக்கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

.இதன்படி பழைய கட்டடத்தை இடித்து விட்டு 5 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில் நுட்படத்தில் புதியதாக 3 மாடி கட்டடம் கட்டப்படுகிறது. இதுதொடர்பாக கலந்தாலோசகர் நியமித்து விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மின் தடையை கருத்தில் கொண்டு மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 10.20 லட்சத்தில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்படுகிறது.இந்த தீர்மானங்கள் தொடர்பாக இன்று (24ம் தேதி) நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது

Last Updated on Thursday, 24 December 2009 09:39