Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

Print PDF

தினமலர் 01.02.2010

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

திட்டக்குடி : பெண்ணாடம் பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது.பெண்ணாடம் பேரூராட்சி கேளிக்கை வரி மானியத் திட்டம் 2008- 09ன் கீழ் பத்து லட்சமும், கலெக்டர் வளர்ச்சி நிதி ஒரு லட்சமும் சேர்த்து பஸ் நிலைய வளாகத் தில் நவீன சுகாதார வளாகம் கட்டப் பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி துணைத் தலைவர் காதர், தி.மு.., நகர செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முத்துவேல் வரவேற்றார். கவுன்சிலர்கள் அருள், விஜயகுமார், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, தி.மு.., நிர்வாகிகள் சுகுணா, சீனிவாசன் வாழ்த்தி பேசினர். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் மாரிமுத்து, எழிலரசி, ஞானபிரகாசம், செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Last Updated on Monday, 01 February 2010 06:24