Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் ரூ. 18 லட்சம் செலவில் நிழற்குடை

Print PDF

தினமலர் 09.02.2010

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் ரூ. 18 லட்சம் செலவில் நிழற்குடை

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் 18 லட்சம் ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திற்குள் திருக்கோவிலூர், கடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களுக்கு செல் லும் பயணிகள் காத்திருக்க கட்டட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்தில் தெற்கு பகுதியில் தேசிய நெடுஞ் சாலை ஓரம் மழை, வெயில் காலங்களில் நிழற்குடை இல்லாமல் வெட்டவெளியில் காத்திருந்தனர். இந்த மார்க்கமாக செல் லும் பயணிகள் வசதிக் காக எம்.எல்.., திருநாவுக்கரசு, தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 18 லட்ச ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கினார். அதன்படி இதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் சென்னை மார்க்கம் செல்லும் பய ணிகள் நலனிற்காக தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு பகுதியில் நிழற் குடை கட்ட எம்.எல்.., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Last Updated on Tuesday, 09 February 2010 10:12