தினமலர் 11.02.2010
மேலப்பாளையத்தில் ரூ.55 லட்சத்தில் நவீன ஆடறுப்பு மையம் திறப்பு
திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் 55 லட்சத்தில் நவீன ஆடறுப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையத்தில் 55 லட்சம் செலவில் நவீன ஆடறுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேலப்பாளையம் மண்டல தலைவர் மைதீன் இதனை திறந்து வைத்தார். இதில் உதவி கமிஷனர் கருப்பசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் இந்த நவீன ஆடறுப்பு மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.