தினமணி 11.02.2010
கிருஷ்ணகிரியில் இரு ஊட்டச்சத்து மையங்கள் திறப்பு
கிருஷ்ணகிரி, பிப்.10: கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் 2 ஊட்டச்சத்து மையங்களை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சத்துருண்டைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் 3-வது வார்டு பகுதியில் ஊட்டச்சத்து மையங்கள் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வந்தனர். அவர்களின் கோரிகையை ஏற்று நகராட்சிக்கு உள்பட்ட காவா மேடு, பெங்காலி தெரு ஆகிய பகுதிகளில் ஊட்டச்சத்து மையங்களை தொடங்கப்பட்டன.
நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் கோகிலகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.