தினமலர் 21.02.2010
தூத்துக்குடி மாநகராட்சிபுதிய அலுவலகம் கட்டும் பணி : தலைமை பொறியாளர் ஆய்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக புதிய கட்டுமான பணியினை சென்னை தலைமைப் பொறியாளர் ரகுநாதன் நேற்று ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகராட்சியானதால் மாநகராட்சி அலுவலக பிரமாண்ட கட்டடம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் நவீன வடிவமைப்பு மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணியினை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந் நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்ய நேற்று சென்னை நகராட்சிகளின் தலைமைப் பொறியாளர் ரகுநாதன் தூத்துக்குடி வந்தார். மாநகராட்சி கமிஷனர் (பொ) இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் புதிய கட்டடம் கட்டும் பணியினை பார்வையிட்டார்.