Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபாலசமுத்திரம் கண்மாயை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 03.03.2010

கோபாலசமுத்திரம் கண்மாயை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியிலுள்ள கோபாலசமுத்திரம் கண்மாய் 40 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் கோபாலசமுத்திரம் கண்மாய் உள்ளது. இதற்கு நீர் வரத்து வாய்க்கால்களே கிடையாது. பாசனம் பெறும் நிலங்களும் இல்லை. மழைநீர் தேங்கி நிற்கும் இக்கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பயன்பட்டு வருகிறது.தற்போது மழைநீர் இல்லாமல் முழுக்க ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளின் கழிவுநீர் தேங்கி பெரிய சாக்கடை குளம் போல் காணப்படுகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் மூன்றே கால் ஏக்கர் நிலம் அரசு ஆஸ்பத்திரி பயன் பாட்டிற்கு வழங்கப்பட் டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டி, கரைகளை அகலப்படுத்தி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கழிவுநீர் தேங்குவதை தடுத்து, மழைநீர் மட்டும் தேங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தற்போது கண்மாய்க்கு வரும் சாக்கடை கால் வாய்களை மற்ற கால் வாய்களுடன் இணைக்கும் பணி நடக்கிறது. வீடுகளின் கழிவுநீரும் பாதாள சாக்கடையில் சென்று விடும். இதனால் இந்த கண்மாயில் சுத்தமான மழைநீர் மட்டும் தேங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:35