Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

Print PDF

தினமணி 10.03.2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி, மார்ச் 9: பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகளின் நலனை மேம்படுத்த அரசு தனி வாரியம் அமைத்துள்ளது.

÷இதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக பெறவும், வியாபாரிகளை கூட்டி குழு அமைத்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

÷எனவே பண்ருட்டி நகரில் உள்ள சுற்றாடும் மற்றும் நடைபாதை தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாயப் பிரிவில் தங்களது பெயர், வயது, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து மார்ச் 13-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்

Last Updated on Wednesday, 10 March 2010 09:02