Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் குத்தகை ஏலம்

Print PDF

தினமலர் 11.03.2010

சேலம் மாநகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் குத்தகை ஏலம்

சேலம் சேலம் மாநகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரண்டாவது அழைப்பு ஏலம் நடந்தது. கடந்த ஃபிப்ரவரி 2ல் 2010-2011ம் ஆண்டுக்கான பொது ஏலம் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. மலிங்கம் அங்காடி, அச்சுவான் ஏரி புது பஸ் ஸ்டாண்டு கட்டண வசூல், புது பஸ் ஸ்டாண்டு கட்டண கழிப்பிடம், சீனிவாச பூங்கா கட்டண கழிப்பிடம், புது பஸ் ஸ்டாண்டு பொருள் பாதுகாப்பு அறை, பழைய பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டாண்டு உள்ளிட்ட 38 இனங்களுக்கு ஏலம் நடந்தது. அதில், ராமலிங்கம் நாளங்காடிக்கு கூடுதலாக 10 சதவீதமும், புது பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டாண்டுக்கு 8 சதவீதமும், சூரமங்கலம் வார்டு அலுவலக வளாக தினசரி நாளங்காடி சுங்க வசூல் மற்றும் புல்கட்டு கடைகள் சுங்க வசூலுக்கு கூடுதலாக 12 சதவீதமும், ராமலிங்க நாளங்காடி கட்டண கழிப்பிடத்துக்கு கூடுதலாக 36 சதவீதமும், அச்சுவான் ஏரி பொருள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக 36 சதவீதமும், சூரமங்கலம் கறிக்கடை, மீன் கடைக்கு கூடுதலாக 34 சதவீதமும், ..சி., நாளங்காடிக்கு எட்டு சதவீதமும் கூடுதல் தொகை நிர்ணயம் செய்து ஏலம் கேட்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் 38 வருவாய் இனங்களுக்கு நடத்தப்பட்டு ஏலத்தில் ஒரே நாளில் 24 இனங்களுக்கான ஏலம் கேட்கப்பட்டது. நேற்று மீதமுள்ள 14 இனங்களுக்கு ஏலம் நடந்தது. ஏலத்தை எடுக்க ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். மாநகராட்சி ஏலத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Last Updated on Thursday, 11 March 2010 06:15