தினமலர் 15.03.2010
உழவர்சந்தை ஸ்டைலுக்கு மாறுகிறது : திண்டுக்கல் நகராட்சி வாரச்சந்தை
திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி வாரச்சந்தையில் உழவர்சந்தை ஸ்டைலில் 40 லட்சம் ரூபாய் செலவில் 110 கடைகள் கட்டப்பட உள்ளன.
திண்டுக்கல் நாகல்நகரில் பல ஆண்டுகளாக நகராட்சி வாரச்சந்தை செயல் பட்டு வருகிறது. இங்கு தகர செட்டும், கல் தூண்களும் மட்டுமே இப்போது காணப்படுகின்றன. அடிப்படை வசதிகளும் இல்லாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். இந்த சந்தையில் உழவர்சந்தை பாணியில் தகர செட், தடுப்புச்சுவர், திண்ணையுடன் கூடிய 110 கடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பணிகள் நடக்க உள்ளன.