தினமலர் 16.03.2010
நகரியல் பயிற்சி மையத்தில் தங்கும் விடுதி
கோவை: நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்படும் நகரியல் பயிற்சி மைய வளாகத்தில் தங்கும் விடுதி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோவை அழகேசன் ரோட்டில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம் உள்ளது. பயிற்சிக்கு பல மாவட்டங்களிலிருந்து வரும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகரின் வெவ்வேறு பகுதிகளில் தங்க வேண்டியுள்ளது.
இதை தவிர்க்க, 1.50 கோடி ரூபாயில் மாநகராட்சி இரு அடுக்கு தங்கும் விடுதி அமைக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் எட்டு குடியிருப்புகள் அமைக்கப்படும். இவற்றில், ஏசி அறைகளும் உண்டு. வாகனங்கள் நிறுத்த, 3100 சதுர அடியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.