Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு நாளை 5-ம் கட்ட ஏலம்

Print PDF

தினமணி 17.03.2010

ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு நாளை 5-ம் கட்ட ஏலம்

ஒசூர், மார்ச் 16: ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு வியாழக்கிழமை (மார்ச் 18) ஏலம் நடைபெற உள்ளது.ஒசூரில் ரூ.10 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.இந்நிலையில் பஸ் நிலையத்தின் தரைத் தளத்தில் உள்ள கடைகளுக்கு 4 கட்டமாக நடந்த ஏலத்தில் 16 கடைகளுக்கு ஏலம் முடிந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து 5-ம் கட்டமாக முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு வியாழக்கிழமை ஏலம் நடைபெறுமென ஒசூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Last Updated on Wednesday, 17 March 2010 10:50