தினமலர் 18.03.2010
பல மாத இடைவெளிக்கு பிறகு பாதாள சாக்கடை பணி தொடக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாதாள சாக்கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகள் மூன்று கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. பொன்னிமான்துறையில் சுத்திகரிக்கும் நிலையம் அமைக் கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் விஸ்வா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் செய்து வரும் பணிகள் ஏப்ரலில் முடிவுறும் நிலையில் உள்ளன.கிர்லோஷ்கர் என்ற கம்பெனி எடுத்த பணி இடையிலேயே முடங்கிப் போனது. கலெக்டர், நகராட்சி நிர்வாகம் பேசியும் பலனில்லை. பிரச்னை துணை முதல்வர் கவனத்திற்கு சென்றது. அவரது அறிவுறுத்தலின் பேரில் தலைமைச் செயலக அதிகாரிகள் கிர்லோ ஷ்கர் கம்பெனியுடன் பேசி மீண்டும் பணிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று விரைவில் பணிகளை முடிக்க தர கிர்லோ ஷ்கர் கம்பெனி சம்மதித்துள் ளது. எனவே பல மாதங்களுக்கு பிறகு பாதாள சாக் கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன.