தினமணி 26.03.2010
பாகோடு பேரூராட்சியில் படித்துறை திறப்பு
மார்த்தாண்டம், மார்ச் 25: பாகோடு பேரூராட்சியில் விளசேரி பாறைக்கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் படித்துறை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவட்டார் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்த பணி நடைபெற்றது. திறப்பு விழாவில் திருவட்டார் எம்.எல்.ஏ. லீமாரோஸ் கலந்து கொண்டு படித்துறையை திறந்துவைத்தார். விழாவில் பாகோடு பேரூராட்சித் தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் கேதரின் எஸ்தர் டானி, பால்ராஜ், எட்வின் ஐசக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.