Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க வண்டிகள்

Print PDF

தினமணி 16.04.2010

குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க வண்டிகள்

காஞ்சிபுரம், ஏப். 15: காஞ்சிபுரத்தில் நகராட்சி ஊழியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித் தனியாக சேகரிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டன.

÷இந்த வண்டிகளை நகராட்சித் தலைவர் வி.ராஜேந்திரன் வழங்கினார். நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவி, முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் பரணிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

÷மொத்தம் 25 வார்டுகளுக்கு 25 வண்டிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம். அந்த வண்டிகளில் மக்கும் குப்பை, மற்றும் மக்காத குப்பை என இரு பிரிவுகள் உள்ளன.

÷இந்த வண்டிகளை பயன்படுத்தி காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளன.

Last Updated on Friday, 16 April 2010 09:52