தினமணி 16.04.2010
கருங்காலிவிளையில் கலையரங்கு திறப்பு
நாகர்கோவில், ஏப். 15: வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை அருகே கருங்காலிவிளையில் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கை எஸ். ஜெயபால் எம்எல்ஏ திறந்துவைத்தார்.
குளச்சல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தக் கலையரங்கு கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் பேரூர் காங்கிரஸ் தலைவர் தேவராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், கவுன்சிலர் சரோஜா, திமுக பிரதிநிதி பொன்னுலிங்கம், ஊர்த் தலைவர் அரிகிருஷ்ணன்ராஜா, ஆசாரிப்பள்ளம் பேரூராட்சித் தலைவர் வில்லியம், நகரத் தலைவர் விஜிலியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.