தினமலர் 23.04.2010
பாதாள சாக்கடை பணிக்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு
தேனி:தேனி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. தேனியில் பாதாள சாக்கடை அமைக்கும் முன்னேற் பாட்டு பணிகள் ஓராண்டிற்கும் முன்பிருந்து நடந்து வந்தன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்வதில் பிரச்னை எழுந்தது. தற்போது கருவேலநாயக்கன்பட்டியில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பாதாள சாக்கடை அமைக்க 36 கோடி ரூபாய் செல வாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தாமதம் காரணமாக இந்த மதிப்பீடு 45 கோடி ரூபா யாக உயர்ந்துள்ளது.உயர்த்தப்பட்ட மதிப்பீட்டிற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.