Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு

Print PDF

தினமலர் 28.04.2010

புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி பஸ் நிறுத்தத் தில் வள்ளியம்மை அறக்கட்டளை மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா, மறைந்த வள்ளியம்மை சிலை திறப்பு விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் என முப்பெரும் விழா கூத்தக்குடியில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் காந்திமதி, ஆர்.டி.., வனிதா, தாசில்தார் மணி, பொறியாளர் இளங்கோவன், சந்திரசேகர், கோமுகிமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 28 April 2010 06:28