தினமலர் 05.05.2010
பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் வளாகம்
திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அமைக்கும் பணி நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார மண்டலங்கள் தோறும், ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இதுவரை சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (வார்டு ஆபீஸ்) இல்லை. இதையடுத்து ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் முத்துப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் பஸ் ஸ்டாண்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கான சுகாதார நடவடிக்கையை புதிய அலுவலகத்தில் இருந்தபடி மேற்கொள்ள முடியும். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அமைக் கும் பணி நடக்கிறது. முதல்கட்டமாக அஸ்திவாரம் தோண்டப் பட்டுள்ளது. இரண்டு தளங்களாக அமையும் இக்கட்டடத்தில் கீழ்த் தளத்தில் ஆய்வாளர் அலுவலகம், மேல்தளத்தில் கருத்தரங்க கூடம் அமைக்கப்படுகிறது. இவற்றில் கீழ்த்தள பணிகள் மட்டும் முதல் கட்டமாக நிறைவு செய்யப்படும். அடுத்தகட்ட பணிகள், அதன்பின் துவங்கும், என்றனர்.